எண்ணுார் விபத்தில் பலியானோர் உடல்கள் அசாம் அனுப்பிவைப்பு
சென்னை, சென்னை எண்ணுார் அருகே, சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது, திடீர் விபத்து ஏற்பட்டது. இதில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைக்கு பின், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' தனி விமானம் வாயிலாக, நேற்று காலை 8:40 மணிக்கு, சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து தொடர்பாக, ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது, காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.