உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் சில்மிஷம் கார் டிரைவர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் கார் டிரைவர் கைது

புளியந்தோப்பு,:புளியாந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 3ம் தேதி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான இளையராஜா, 49, என்பவர், தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரை கண்டதும், இளையராஜா அங்கிருந்து தப்பினார்.பின், சிறுமியின் தாய் மற்றும் அக்கா இருவரும், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.அதன்படி வழக்கு பதிந்து விசாரித்த மகளிர் போலீசார், இளையராஜாவை போக்சோ பிரிவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை