உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கொட்டியவர்களிடம் அபராதம் வசூல்... ரூ.92.18 லட்சம்! தொடர்ந்து கொட்டினால் வழக்கு பாயும்

குப்பை கொட்டியவர்களிடம் அபராதம் வசூல்... ரூ.92.18 லட்சம்! தொடர்ந்து கொட்டினால் வழக்கு பாயும்

சென்னையில் சாலை, நீர்நிலைகள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை, கட்டட கழிவு உள்ளிட்டவை கொட்டியவர்களிடமிருந்து, கடந்த ஒன்றரை மாதங்களில் 92.18 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டுவோர் மீது போலீசில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019ன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 90 சதவீதம் வீடு, வீடாகச் சென்று மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், குப்பை சேகரித்து வருகின்றனர். கட்டுமான கழிவு கொட்டி வைக்க, மண்டலத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனாலும், அனுமதிக்கப்படாத இடங்களில் குப்பை கொட்டும் பணி தொடர்ந்து வருகிறது. இதை தவிர்க்க, மாநகராட்சியின், 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி செயற்பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்டோர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவினருக்கு பொது இடங்கள், சாலைகள், காலி மனைகள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதைத் தவிர, அந்தந்த மாநகராட்சி பொறியாளர்கள், துப்புரவு மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோரும், பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.இதன்படி, கடந்த ஒன்றரை மாதங்களில், 92.18 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், தொடர்ந்து சிலர் மீண்டும் குப்பை கொட்டி வருவதாக கண்டறியப்படுகிறது.அவ்வாறு குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதித்தாலும், பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவித்ததாக போலீசில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்ய, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தொடர்ந்து குப்பை கொட்டுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்தி மணிகண்டன் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குப்பை கொட்டுவோர், அதை எரிப்போர் மீது, 'ஸ்பாட் பைன்' விதிக்கும் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதை கண்காணிக்க, மண்டலம் வாரியாக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மட்டும், 34.23 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, 92.18 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.நீர்நிலைகள், காலி மனைகள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவு கொட்டுவதை தவிர்த்து, மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மண்டலம் வாரியாக ஒன்றரை மாதத்தில் வசூலான அபராதம்

மண்டலம் அபராதம் (ரூபாயில்)திருவொற்றியூர் 3,74,900மணலி 2,98600மாதவரம் 5,63,800தண்டையார்பேட்டை 6,17,100ராயபுரம் 7,80,400திரு.வி.க.நகர் 3,14,300அம்பத்துார் 9,04,200அண்ணாநகர் 7,78,400தேனாம்பேட்டை 6,35,900கோடம்பாக்கம் 12,53,200வளசரவாக்கம் 6,21,400ஆலந்துார் 6,39,900அடையாறு 6,14,300பெருங்குடி 3,25,700சோழிங்கநல்லுார் 4,96,300மொத்தம் 92,18,400

அபராத தொகை எவ்வளவு?

திடக்கழிவு கொட்டுதல், தரம் பிரிக்காதது அபராதம் (ரூபாயில்)பொது, தனியார் இடங்களில் துாக்கி எறியப்படும் குப்பை/ வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் 5,000குப்பை தரம் பிரிக்காத தனிநபர் வீடுகள் 1,000குப்பை தரம் பிரிக்காத குடியிருப்புகள் 5,000அதிக குப்பை உருவாக்குதல் 5,000கட்டட கழிவு 1,000 கிலோ வரை 5,000கட்டட கழிவு 1,000 கிலோவுக்கு மேல் 5,000தோட்டக்கழிவு, மரக்கழிவுகள் 2,000மீன், வளர்ப்பு பறவைகள், இறைச்சி கழிவுகள் தரம் பிரிக்காமல் கொடுத்தல் 5,000கூவி விற்பவர்கள், கடை வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காமல் இருத்தல் 1,000விற்பனையாளர்கள், கூவி விற்பனை செய்வோர் தரம் பிரிக்காமல் கொடுத்தல் 2,000பொது நிகழ்ச்சி நடக்கும் இடங்களில், 12 மணி நேரத்தில் துாய்மைப்படுத்தாமல் இருத்தல் 5,000குப்பை தொட்டி, கழிவுநீர் பாதை, கால்வாய், நீர்நிலைகளில் குப்பை கொட்டுதல் 5,000அரசு, தனியார், வணிக வளாகங்களில் திடக்கழிவு எரித்தல் 5,000- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ