உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மேல்மருவத்துார்,மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில், மின் மோட்டார் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து, ஒருவர் உயிரிழந்தார். சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆண்டவன், 50; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் இரவு வணிக வளாகத்தில் உள்ள நீர் ஏற்றும் மின்மோட்டாரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல்மருவத்துார் போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை