உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது - நாளை நடக்குது குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

பொது - நாளை நடக்குது குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை, சென்னை குடிநீர் வாரிய மண்டல பகுதி அலுவலகங்களில், நாளை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மக்கள் குறைதீர் கூட்டம், நாளை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மண்டல குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடக்கிறது. இதில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை, குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம், இணைப்பு தொடர்பான பிரச்னை மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாகவும் விளக்கம் பெறலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி