உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  துபாய் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் செய்தவரை காரில் கடத்தியோரிடம் விசாரணை

 துபாய் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் செய்தவரை காரில் கடத்தியோரிடம் விசாரணை

விருகம்பாக்கம்: கடலுார் மாவட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், 29. இவர், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், ஜெயமோகன் என்பவர் நடத்தும் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்தார். ஆறு மாதமாக, சரத்குமாருக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு சொந்தமான, 47 லட்சம் ரூபாயை கையாடல் செய்து, கடந்த 26ம் தேதி தன் காதலியான காவியா என்ற பெண்ணுடன், துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளார். இதையறிந்த ஜெயமோகன், தன் உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து, சென்னை விமான நிலையத்திலேயே, சரத்குமார் மற்றும் காவியாவை மடக்கி பிடித்துள்ளார். அதேநேரம், சென்னைக்கு வந்த ஜெயமோகன், நண்பர் உதவியுடன் இருவரையும் காரில் கடத்த முயன்றார். இருவரும் சத்தம் போட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பரங்கிமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்னை என்பது தெரிந்ததால், போலீசார் எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பினர். காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவுடன், மீண்டும் இருவரையும் ஜெயமோகன் தரப்பினர் காரில் கடத்தி, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து பணத்தை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இதையறிந்த சரத்குமாரின் உறவினர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். மொபைல் போன் டவர் மூலம், சரத்குமாரை அடைத்து வைத்திருந்த வீட்டை கண்டறிந்த போலீசார், இருவரையும் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட ஜெயமோகன், 38, அவரது நண்பரான சிவகங்கையைச் சேர்ந்த அருண் பாண்டியன், 31, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி