உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா வாங்க பூட்டுடைத்த  சிறுவன் சிக்கினான்

கஞ்சா வாங்க பூட்டுடைத்த  சிறுவன் சிக்கினான்

ஓட்டேரி:ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனி, 4 வது தெருவைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன், 21. இவர், கடந்த 31ம் தேதி மாலை, குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றார். பிப். 1 ம் தேதி இரவு 10:00 தேதி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த ரூ. 48000 பணம் திருடு போனது தெரிந்தது. புகாரின் படி விசாரித்த ஓட்டேரி போலீசார், கஞ்சா வாங்குவதற்காக பணத்தை திருடிய பெரம்பூர், மங்களா புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை