/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோழிங்கநல்லுாரில் ஒருங்கிணைந்த கட்டடம் சட்டசபையில் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
சோழிங்கநல்லுாரில் ஒருங்கிணைந்த கட்டடம் சட்டசபையில் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
சென்னை:சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், சட்டசபை கூட்டத்தில் நேற்று பேசியதாவது:சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், உணவு பொருள் வழங்கல் உதவி கமிஷனர் அலுவலகம், கூட்டுறவு வங்கி, நீதிமன்றம் போன்ற கட்டடங்கள், வெவ்வேறு இடத்தில், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். சோழிங்கநல்லுாரில், 439/2 சர்வே எண்ணில், 3.92 ஏக்கர் அரசு இடம் உள்ளது. அதில், ஒருங்கிணைந்து வளாகம் கட்டி, பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு, வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ''இந்தாண்டு நிதி சரியாக இருக்கும்போது முன்னுரிமை வழங்கி தாலுகா அலுவலகம் கட்டப்படும்,'' என பதில் கூறினார்.