| ADDED : நவ 23, 2025 04:11 AM
கோபிநாத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மடிக்கணினி, மொபைல் போனை பறிமுதல் செய்து, அவற்றை ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. தொ ழிலதிபர் என பந்தா காட்டிக்கொண்டு, கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 12க்கும் மேற்பட்ட பெண்களிடம், கோபிநாத் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மூன்று மாத மொபைல் போன் உரையாடல், மடிக்கணினி தகவல்களை சோதனை செய்தபோது, பெண் டாக்டர் உட்பட 12 பெண்கள் கோபிநாத்திடம் தொடர்பில் இருந்து, பணம் ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும், போலி தொழிலதிபர் என தெரிய வந்துள்ளதால், மேலும் ஏராளமானோர் புகார் அளிக்கவும் வாய்ப்புள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.