ரவுடி வேட்டை 6 நாட்களில் 153 பேர் கைது
ரவுடி வேட்டை 6 நாட்களில் 153 பேர் கைது ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை, குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடி வேட்டை நடந்தது. இதில், ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் 65 ரவுடிகள், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 88 பேர் என 153 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின், 112 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.