உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்னி பஸ் டயர் கழன்று ஓடி ஆட்டோவில் மோதி விபத்து

ஆம்னி பஸ் டயர் கழன்று ஓடி ஆட்டோவில் மோதி விபத்து

வடபழனி:ஆம்னி பேருந்தின் டயர் கழன்று ஓடி ஆட்டோவில் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுனர் காயமடைந்தார்.தஞ்சாவூரில் இருந்து இ.சி.ஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக, கோயம்பேடு நோக்கி ஆம்னி பேருந்து வந்தது. இந்த பேருந்தை, தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான் கென்னடி, 57, என்பவர் ஓட்டி வந்தார்.சென்னை, வடபழனி 100 அடி சாலையில், அம்பிகா எம்பயர் ஹோட்டல் அருகே வந்த போது, ஆம்னி பேருந்தின் பின்னால் உள்ள இடதுபக்க அச்சு உடைந்துள்ளது.இதனால், டயர் தனியாக கழன்று சாலையில் ஓடி, அங்கிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதிஉள்ளது.இதில், ஆட்டோ ஓட்டுனரான, வடபழனி, பக்தவச்சலம் காலனி முதலாவது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன், 52, என்பவரது இரு கால் மூட்டுகளிலும் காயம் ஏற்பட்டது.மேலும், டயர் மோதிய வேகத்தில், ஆட்டோவின் இடதுபக்கம் முழுதும் சேதமடைந்தது. தகவலின்படி வந்த பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார், சாலை நடுவே நின்ற ஆம்னி பேருந்தை, 'கிரேன்' உதவியுடன் அகற்றினர். இது குறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.இதனால், வடபழனி 100 அடி சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

2 நாள் வேலைக்கு போக முடியாது

நான் தினமும், 150 ரூபாய் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறேன். நேற்று காலை சவாரிக்காக, வடபழனி 100 அடி சாலையில் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு, பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது, திடீரென ஏதோ ஒன்று, என் ஆட்டோ மீது மோதியது. இதில், என் இரு கால் மூட்டுகளிலும் காயம் ஏற்பட்டது. உடனே, ஆட்டோவில் இருந்த வெளியே வந்தேன். அதன் பின் தான், ஆம்னி பேருந்து சக்கரம் கழன்று வந்து, அருகில் உள்ள மருத்துவமனை சுவரின் மீது மோதி, என் ஆட்டோ மீது மோதியது தெரியவந்தது. போலீசார் எனக்கு முதல் உதவிக்கு ஏற்பாடு செய்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு என்னால் பணிக்குச் செல்ல முடியாது. ராஜேந்திரன், 52,காயமடைந்த ஆட்டோ ஓட்டுனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை