உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1 கோடி மோசடி ஒருவர் கைது

ரூ.1 கோடி மோசடி ஒருவர் கைது

ஆவடி, மின்வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக, பணம் மோசடி செய்தவர்களில் ஒருவர் கைதானார்.சென்னை ஆவடியை சேர்ந்த சிலரிடம், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், மின் வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி, 1 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றினார். பணம் கொடுத்தவர்கள், ஆவடி போலீஸ் கமிஷனரக மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், கார்த்திகேயனின் கூட்டாளியான அருள்ஜோதி, 45, என்பவரை, நேற்று மாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி