மேலும் செய்திகள்
திருச்சி விமானத்தில் இயந்திர கோளாறு
07-Aug-2025
சென்னை, குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில், சிகரெட் புகைத்து ரகளையில் ஈடுபட்ட பயணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். குவைத்தில் இருந்து சென்னைக்கு 'இண்டிகோ' விமானம், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதில், 150 பேர் இருந்தனர். இந்த விமானத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சேக் முகமது, 28, என்பவர் பயணித்தார். இவர், தன் இருக்கையில் இருந்து அடிக்கடி எழுந்து, விமானத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், விமானத்தில் சேக் முகமது சிகரெட் புகைப்பது தெரிய வந்தது. இது குறித்து விமான பணிப்பெண்கள் அவரிடம் எச்சரித்துள்ளனர். இதற்கு, சேக் முகமது அவர்களிடம் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார். விமானம் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகளை நடத்தி முடித்தனர். பின் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Aug-2025