குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவிட்ட வாலிபர் சிக்கினார்
சென்னை,சமூக வலைதளங்களில், குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டவரை, மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.'சமூக வலைதளங்களில், 'சிக்னல்' என்ற மொபைல் செயலியில், குறிப்பிட்ட நபர் குழுக்களை துவங்கி, குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர் ஒருவர், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி, 22 என்ற வாலிபர், ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.இதையடுத்து, அவரை தனிப்படை போலீசார், போக்சா வழக்கில் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, மொபைல் போனில் இருந்த ஆபாச வீடியோக்களை போலீசார் அழித்தனர்.