உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 5வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

5வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

திருப்போரூர்:சிறுசேரியில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து, ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை செய்துக் கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கலைவாணி, 36, இவருக்கு 11 வயது பெண் குழந்தை உள்ளது. இவர் சிறுசேரியில், தனியார் ஐ.டி., நிறுவனத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணியில் இருந்தபோது, ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்தார்.அங்கிருந்தவர்கள் அவரை ஏகாட்டூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கலைவாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை