உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குப்பை கொட்ட சென்ற பெண்: அதிவேகமாக வந்த கார் மோதி பலி

 குப்பை கொட்ட சென்ற பெண்: அதிவேகமாக வந்த கார் மோதி பலி

நெசப்பாக்கம்: குப்பை கொட்டுவதற்காக, வீட்டின் அருகே சாலையை கடந்த பெண், கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். கே.கே.நகர் அடுத்த நெசப்பாக்கம், விஜயராகவபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் இந்திரா, 55. இவர், நேற்று காலை, குப்பை கொட்டுவதற்காக, வீட்டின் அருகில் உள்ள ராஜமன்னார் சாலை - விஜயராகவபுரம் மூன்றாவது தெரு சந்திப்பை கடந்தார். அப்போது, கே.கே., நகரில் இருந்து நெசப்பாக்கத்தை நோக்கி அதிவேகமாக சென்ற 'இன்னோவா கார்' இந்திரா மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த இந்திரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாண்டிபஜார் போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான திருச்சி, மேலகந்தர் கோட்டையை சேர்ந்த மகேஷ் குமார், 28, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி