உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் எம்.பி., நாளை முதல் பிரசாரம்

முன்னாள் எம்.பி., நாளை முதல் பிரசாரம்

கோவை : உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நாளை முதல் பிரசாரம் செய்கிறார். இது குறித்து, பா.ஜ., வெளியிட்ட அறிக்கை: நாளை கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் பிரசாரத்தை துவக்குகிறார். அக்., 9ல் திண்டுக்கல், 10ல் மதுரை, 11ல் ராமநாதபுரம், 12ல் திருச்சி, 13ல் சென்னை, 14ல் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 15ல் கோவை மாநகர் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறார். 16ம் தேதி கோவை புறநகர் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை