| ADDED : ஆக 20, 2024 10:33 PM
கோவை;கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்,40; கொத்தனார். இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் தங்கி, கட்டடம் புதுப்பித்தல் பணி மேற்கொண்டு வருகிறார். இவரது தம்பி முறையான விஜினும்,38, தியேட்டரில் தங்கி கொத்தனார் பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி விஜின் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்திவிட்டு சுற்றுச்சுவர் இல்லாத மொட்டை மாடியில் துாங்கினர்.நள்ளிரவு, 1:12 மணியளவில் எதிர்பாராத விதமாக விஜின் கீழே விழுந்துள்ளார். காலை, 6:00 மணிக்கு அவரது நண்பர்கள் எழுந்து பார்த்தபோது, விஜின் உயிரிழந்து கிடந்தார். உடனடியாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடலை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.