உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமர் கோவில் சார்பில் அன்னதானம் 

ராமர் கோவில் சார்பில் அன்னதானம் 

கோவை : ராம்நகரிலுள்ள கோதண்டராமர் கோவில் சார்பில் நேற்று, அசோகாபிரேமா திருமணமண்டபத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது. கோதண்டராமர் கோவில் சார்பில், கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற வார நாட்களில், அன்றாடம் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.95வது நாளான நேற்று, மூன்று வகையான உணவுகள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் கோவில் சார்பில் வழங்கப்பட்ட அன்னதான உணவை வாங்கி உண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம், செயலாளர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை