உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொன்னுத்தம்மன் கோவில் அருவியில் வெள்ளம்

பொன்னுத்தம்மன் கோவில் அருவியில் வெள்ளம்

பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பொன்னுத்தம்மன் கோவிலில் உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.கோவை துடியலுார் அருகே வரப்பாளையத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொன்னுத்தம்மன் மலை உள்ளது. இங்கு நவகிரகம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு மாதம் அமாவாசையின்போது, சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.சின்னதடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, பொன்னுத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர், அதை தீர்த்தமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !