உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளை நிலங்களில் சந்தன மரங்கள்; மணம் வீசும் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு

விளை நிலங்களில் சந்தன மரங்கள்; மணம் வீசும் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு

உடுமலை : வனத்துக்குள் திருப்பூர் - 10 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.உடுமலை பகுதிகளில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.விளை நிலங்களில், மரச்சாகுபடி திட்டமாகவும், பசுமை வளர்க்கும் வகையிலும், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள அந்தியூரில், விவசாயி நாராயணசாமிக்கு சொந்தமான நிலத்தில், மகா கனி, காயா, வேங்கை, சந்தனம், குமிழ், செம்மரம், தேக்கு என, 330 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.அதே போல், பொன்னேரி, சுண்டக்காம்பாளையம், விவசாயி ரங்கநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், மகா கனி, பாக்கு என, 983 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில் நிறுவன வளாகங்கள்,பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பூங்கா மற்றும் பொது இடங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.இம்மரக்கன்றுகள், மரங்களாகும் வரை பராமரித்து, பசுமை, சுற்றுச்சூழல் காக்கும் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை