உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல...! இந்தாண்டு மட்டும் 430 பேர் விபரீதம்

எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல...! இந்தாண்டு மட்டும் 430 பேர் விபரீதம்

கோவை; கோவை மாநகரில் இந்தாண்டு அக்., வரை, 430 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்கிறார் பிரபல மனநல மருத்துவர் மோனி.தற்கொலை மனிதத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதியில் தற்கொலை நடந்தால், அது அப்பகுதியில் பெரிய செய்தியாக இருக்கும். கடன் தொல்லை, குடும்ப பிரச்னை, உடல் நலம் பாதிப்பு என பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்தனர். அதன் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. எந்த பிரச்னை வந்தாலும், நின்று சமாளிக்க வேண்டும் என பெற்றோர் கற்றுக்கொடுத்தனர். மன தைரியம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது, சிறு சிறு பிரச்னைகளை சந்திக்க முடியாமல் பலர் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தினசரி இரண்டு, மூன்று பேர் தற்கொலை செய்து கொள்வதை பார்ப்பது வருத்தமளிக்கிறது. அதிலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் விபரீத முடிவு எடுப்பது கொடுமையானது. சமீபத்தில் போத்தனுார், வெள்ளலுார் பகுதியை சேர்ந்த டிப்ளமோ முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்ததற்காக, அவரின் தந்தை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அச்சிறுவன், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், சிங்காநல்லுார் பகுதியில் தேர்வுக்கு படிக்காமல், டிவி பார்த்துக்கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி, தாய் திட்டியதற்காக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போன்று, சிறு சிறு காரணங்களுக்காக பல சிறுவர்கள், இளைஞர்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். கடந்த, 2023ம் ஆண்டில் மொத்தம், 432 பேர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 305 ஆண்கள், 95 பெண்கள், 16 சிறுவர்கள், 16 சிறுமியர். இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் அக்., 31ம் தேதி வரை மட்டும் 430 பேர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். அதில் 306 ஆண்கள், 96 பெண்கள், 18 சிறுவர்கள், 9 சிறுமியர் மற்றும் ஒரு திருநங்கை. இரண்டு ஆண்டுகளில் மட்டும் 862 பேர் தற்கொலை மூலமாக, தங்களின் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

'மனம் விட்டு பேச வேண்டும்'

மூத்த மனநல மருத்துவர் மோனி கூறுகையில், ''தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். மன அழுத்தத்தில் இருப்போர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும். மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறைந்து விடும். சமீப காலமாக சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து கேள்விப்படும் போது வருத்தம் அளிக்கிறது. பெற்றோர் கண்டித்ததற்காக எல்லாம் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிறு வயதில் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாத சிறுவர்கள், முடிவெடுக்க தெரியாமல் இப்படி ஒரு தவறான முடிவுக்கு செல்கின்றனர்,'' என்றார்.

தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்கலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Matt P
டிச 07, 2024 12:39

அதில் 306 ஆண்கள், 96 பெண்கள், 18 சிறுவர்கள், 9 சிறுமியர் மற்றும் ஒரு திருநங்கை....இத்தனை பேரில் ஒரே ஒரு திருநங்கை என்கிற போது திருநங்கை தனி ஆளாக குடும்ப சூழ்நிலை இல்லாமல் வாழ்வதால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்குமோ என்று தோன்றுகிறது. குழந்தைகளை வளர்க்கும்போது சிறுவயதிலேயே கண்டிப்பும் அன்பும் கலந்து வளர்க்க வேண்டும். மிகுந்த அன்போடு வளர்த்து விட்டு திடீரென்று கண்டிப்பு கொடுக்கும்போது தஆங்கி கொள்ளாத ஒரு வேதனை ஏற்பட்டு விடுகிறது. அதன் தாக்கம் தான் தற்கொலை.


Matt P
டிச 07, 2024 12:32

தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். மன அழுத்தத்தில் இருப்போர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும். மன அழுத்தம் உள்ளோர் குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசலாம் தான். சில நேரங்களில் குடும்பத்தினரே மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம். நீண்ட நாள் போராட்டத்திலும் முடிவில்லாதததாக இருக்கலாம். குடும்பத்தினர் காரணம் இல்லாமல் வேறு யாராவதஆக இருந்தால் தள்ளி வைத்து விடுவார்கள் அல்லது விலகி கொள்வார்கள். வொவ்வொருவரும் வெவ்வேறு குணங்களில் வளர்வதால் அடுத்தவர் குணத்தை மாற்றுவது எளிதல்ல. மனம் விட்டு பேசுவது கூட விபரீதத்தை உண்டாக்கலாம்.


முக்கிய வீடியோ