உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏன் இதுவரை பறிமுதல் எதுவும் இல்லை? பறக்கும் படைகளுக்கு கலெக்டர் நோட்டீஸ்!

ஏன் இதுவரை பறிமுதல் எதுவும் இல்லை? பறக்கும் படைகளுக்கு கலெக்டர் நோட்டீஸ்!

கோவை;கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் சிலர், வாகன சோதனையில் தீவிரம் காட்டுவதில்லை என்கிற புகார் எழுந்திருக்கிறது. இதுவரை ஒரு முறை கூட, எந்த பொருளும் பறிமுதல் செய்யாத குழுவினருக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில், மூன்று ஷிப்ட்டுகள் போடப்பட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று குழுக்கள் வீதம், 30 பறக்கும் படைகள் மற்றும், 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதன்பின் மேலும், 30 குழுக்கள் அமைக்கப்பட்டன.அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது; 360 டிகிரி கோணத்தில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டது. இவ்வாகனங்களின் இயக்கம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டது.இதுவரை 328 வழக்குகள் பதிவுபறக்கும் படையை சேர்ந்த குழுவினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இடத்தில் வெகுநேரம் நின்றிருந்தால், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விளக்கம் கோரப்படும்.நிலையான கண்காணிப்பு குழுவினர், முக்கியமான ஏதேனும் ஓரிடத்தில் முகாமிட்டு, அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனையிடுவர்.நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, 11ம் தேதி வரை, 328 வழக்குகள் பதியப்பட்டு, 12 கோடியே, 24 லட்சத்து, 90 ஆயிரத்து, 805 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில சட்டசபை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட, பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், இதுவரை பறிமுதல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.அனுப்பினார் நோட்டீஸ்பறிமுதல் செய்யாத குழுக்களின் செயல்பாட்டில், தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குழுவினருக்கு விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'கோவை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் பணிபுரியும், 70க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு, 'ஏன் வாகன சோதனையில் பணம் கைப்பற்றவில்லை' என, விளக்கம் கோரப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.'தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின், பணிகளை அவமதிக்கும் செயல்பாடாகவும், பணம் கைப்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, இயற்கை நியதிக்கு மாறாகவும் இருக்கிறது. இதை கண்டிக்கிறோம்.விளக்கம் கேட்டு அனுப்பிய நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ் யார், யாருக்கு?

மேட்டுப்பாளையம் தொகுதிக்கு நான்கு பறக்கும் படைகள், சூலுார் தொகுதியில் ஐந்து பறக்கும் படைகள், மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆறு பறக்கும் படைகள், நான்கு கண்காணிப்பு குழுக்கள், கோவை வடக்கு தொகுதியில் ஐந்து பறக்கும் படைகள், எட்டு கண்காணிப்பு குழுக்கள், தொண்டாமுத்துார் தொகுதியில் மூன்று பறக்கும் படைகள், நான்கு கண்காணிப்பு குழுக்கள், கோவை தெற்கு தொகுதியில் ஒரு பறக்கும் படை, ஒரு கண்காணிப்பு குழு, சிங்காநல்லுார் தொகுதியில் ஐந்து பறக்கும் படைகள், எட்டு கண்காணிப்பு குழுக்கள், கிணத்துக்கடவு தொகுதியில் நான்கு பறக்கும் படைகள், மூன்று கண்காணிப்பு குழுக்கள், பொள்ளாச்சி தொகுதியில் ஒரு கண்காணிப்பு குழுவுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

NATARAJAN R
ஏப் 13, 2024 09:07

மாவட்ட ஆட்சியர் தன் கடமையை சரிவர செய்திருக்கிறார் இதில் எங்கே அதிர்ச்சி இருக்கிறது? பறக்கும் படைக்கு தரப்பட்ட பணி என்ன தெரியுமா? வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு யாரேனும் பணம் வைத்திருந்தால் அல்லது பொருள் வைத்திருந்தால் மற்றும் அவற்றை எடுத்துச் சென்றால் உடனே பறிமுதல் செய்ய வேண்டும் சந்தேகப்படும்படி வாகனங்கள் சென்றால் அவர்களை பரிசோதிக்க வேண்டும் அவ்வாறு செல்லும் போது ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதை பறிமுதல் செய்ய வேண்டும் ஆனால் இந்த பறக்கும் படை ஊழியர்கள், பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், தோளில் ஹேண்ட்பேக் மாட்டிக் கொண்டு செல்பவர்கள் என யாரிடம் பணம் இருக்காதோ, அவர்களை நன்றாக தெரிந்து கொண்டு, இவர்கள் சோதனை செய்வார்கள் சோதனை செய்த அடையாளமாக யாரேனும் ஆயிரம் வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்வார்கள் இவர்களுக்கு நன்றாக தெரியும் தேர்தல் பறக்கும் படை நினைத்தால் கண்டிப்பாக பணத்தை பறிமுதல் செய்ய முடியும் ஆனால் இவர்கள் ஆளுங்கட்சியை பகைத்து கொள்ள மாட்டார்கள் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாது தேர்தல் முடிந்தவுடன் அனைத்து வழக்குகளையும் ஊற்றி மூடிவிடுவார்கள் உதாரணம் திரு ஆ ராசா எம்பி அவர்களின் கார் சோதனை செய்யப்படாமல் அனுப்பப்பட்டது உடனே நடவடிக்கை என்று ஒரு பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்ன நடவடிக்கை தெரியுமா? தற்காலிகமாக பணி இடைநீக்கம் இடைநீக்கம் என்பதே தற்காலிகமானது இதில் தற்காலிக பணிஇடை நீக்கம்? இவர்கள் நினைத்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் நடக்கும் கூட்டங்களில் மறைந்து நின்று பார்த்தால் கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் வரை பணம் தரப்படுவது அனைத்து ஊடகங்களிலும் ஆதாரத்தோடு வெளிவந்தது இவர்கள் அங்கு சென்று இருந்தால் அவர்களை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் அங்கே பாதுகாப்பு பணியில் இருக்கின்ற காவல்துறை அதிகாரிகள் நினைத்தால் இவர்களை கையும் குணமாக பிடித்து பறக்கும் படை இடம் ஒப்படைக்கலாம் ஆனால் இவர்கள் பறக்கும் படை என்ற பெயரில் மக்களை இம்சித்து அரசியல்வாதிகளுக்கு சலாம் வைத்து ஆலவட்டம் செய்கிறார்கள் எனவே கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் இவர்கள் அனைவரும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் யாருடைய நிர்பந்தத்திற்கும் பணிந்து அவர் அனுப்பிய கடிதத்தை திரும்ப பெறக் கூடாது அதைவிட முக்கியம் நமது தேர்தல் கமிஷனர் திரு சத்ய பிரசாத் சாஹூ மிகச் சிறந்த வாய் சொல் வீரர் இவர் தலைமையில் நடந்த எந்த தேர்தலும் நேர்மையாக நடந்தது இல்லைபணம் கொடுப்பதை கண்டும் காணாமல், பொருள் கொடுப்பதை கண்மூடி ரசித்து, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தை எப்படி கேலி கூத்தாக்கலாம்? வெறும் வாய் வார்த்தைகளால் அறிக்கைகள் மூலம் வீர வசனம் பேசி தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதை எள்ளளவும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் இவர் மாமன்னர் பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டதில் உறுதியாக இருக்கிறாரா அல்லது நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து விளக்கம் கேட்டதே திரும்ப பெறுகிறாரா என்பதை


krishnamurthy
ஏப் 13, 2024 18:48

முழுதும் உண்மை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை