உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விநாயகர் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு

 விநாயகர் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பால விநாயகர் கோவிலில் நேற்று ஆண்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கிணத்துக்கடவு பெரியார் நகரில் புகழ்பெற்ற பாலவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடந்தது. இதில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், யாகவேள்வி மற்றும் தீர்த்த கலச பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ