மேலும் செய்திகள்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
22-Mar-2025
கோவை; உலக சுகாதார தினத்தையொட்டி, தீத்திபாளையம் சி.எம்.சி., சர்வதேச பள்ளியில், 'ஆரோக்கியமான தொடக்கமே நம்பிக்கையின் எதிர்காலம்' என்னும் பெயரில், விழிப்புணர்வு பேரணிநடந்தது.காளம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் துவங்கி, தீத்திபாளையம் ஓம் சக்தி கோவில் வரை சுமார், 4.25 கி.மீ., துாரம் மாணவர்கள் பேரணி சென்றனர்.ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பலகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர்.பங்கேற்ற அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் பிரேமலதா நாயர், நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
22-Mar-2025