மேலும் செய்திகள்
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் தொகை தர உத்தரவு
27-Sep-2024
கோவை : கோவை, கணபதிமாநகரை சேர்ந்த கண்ணன், ரேஸ்கோர்சிலுள்ள 'பஜாஜ் பின்சர்வ் ' என்ற நிதி நிறுவனத்தில், 2015 நவம்பரில், 2.32 லட்சம் ரூபாய் தனி நபர் கடன் பெற்றார். மாதந்தோறும், 6,409 ரூபாய் விகிதம், 48 மாதத்தில், ரூ.3.07 லட்சம் திருப்பி செலுத்த வேண்டும். முழு கடன் தொகையை, தவணை முடிவதற்கு முன்பே கண்ணன் செலுத்தி விட்டார். ஆனால், கடன் பாக்கி இருப்பதாக கூறி, அவரை ஏமாற்றி கூடுதலாக 67,845 ரூபாய் வசூலித்தனர்.பாதிக்கப்பட்ட கண்ணன், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'எதிர்வாதியின் முறையற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாட்டிற்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையினை, 12 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு திரும்ப கொடுப்பதோடு, வழக்கு செலவு, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
27-Sep-2024