உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா

பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பூமி நீளாபெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில், 20ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா நடந்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை, முத்து பந்தல், முத்தங்கி அலங்காரத்திலும், இன்று மாலை அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அலங்காரத்திலும், 10ம் தேதி கருட வாகனத்திலும், 11ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து, யானை வாகன நிகழ்ச்சி நடக்கிறது.12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருத்தேர், 13ம் தேதி மாலை, 6:00 மணிக்கு குதிரை வாகனம், பரிவேட்டை, 14ம் தேதி மாலை சேஷ வாகனத்தில், வைகுண்ட நாதன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். இரவு, 8:00 மணிக்கு தெப்பத்தேரும், 15ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி நடக்கிறது.விழாவை ஒட்டி பத்து நாட்களும், திவ்ய பிரபந்த சேவா காலம் தினமும் மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் வளாகத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை