உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

கோவை; போலீஸ் வாகனங்கள் போல் சிவப்பு - நீல விளக்குகள் பொருத்திய, 29 தனியார் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விளக்கை பறிமுதல் செய்தனர்.போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகளின் வாகனங்கள் வருகையை, பிற வாகன ஓட்டிகள் கண்டறியும் வகையில், அரசு வாகனங்களில் சிவப்பு - நீல வண்ணங்களில் (சைரன் லைட்) விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் வருகையின் போதும், சைரன் லைட் பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், சமீப காலமாக சில தனியார் வாகனங்களில், இது போன்ற சிவப்பு - நீல வண்ண விளக்குகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர், எம்.எல்.ஏ., மேயர் உட்பட பலரின் கார்களில், இது போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி கிடையாது.இந்த விளக்குகள் அனைத்தும், எல்.இ.டி., லைட்டுகளால் தயார் செய்யப்பட்டவை. இரவு நேரங்களில் சிவப்பு - நீலம் என மாறி, மாறி ஒளிரும் இந்த விளக்குகள், எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகள் கண்களில் நேரடியாக வெளிச்சத்தை பாய்ச்சி, கூச செய்வதால் விபத்து ஏற்படுகிறது.இது குறித்து நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது, சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விளக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை