உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆற்று புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்த கூடாது! கோர்ட் உத்தரவை அமல்படுத்த கோரி போராட்டம்

ஆற்று புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்த கூடாது! கோர்ட் உத்தரவை அமல்படுத்த கோரி போராட்டம்

பொள்ளாச்சி; 'ஆற்று புறம்போக்கு நிலத்தை ஒரு சமுதாய மக்கள், மயானமாக பயன்படுத்தக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்,' என, ஆழியாறு நீர்வளத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனைமலையில் ஆற்று புறம்போக்கு நிலத்தை ஒரு மதத்தினர், மயானமாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோர்ட் உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆழியாறு படுகை திட்டக்குழு உறுப்பினர் விக்ரம் முத்து ரத்தினசபரி மற்றும் விவசாயிகள், ஆழியாறு நீர் வளத்துறை அலுவலகம் முன் போராட்டடத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.இது குறித்து, திட்டக்குழு உறுப்பினர் கூறியதாவது:ஆனைமலை ஆற்று புறம்போக்கு இடத்தை சுயலாபத்துக்காக சட்ட விரோதமாக ஒரு சமுதாயத்துக்கு, கடந்த, 2022ம் ஆண்டு வருவாய்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து, தனிநபர்களுக்கு சுவாதீனம் செய்து கொடுத்தனர். அங்கு அந்த மதத்தினர் இறந்தவர்களை புதைக்க துவங்கினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாசில்தார், சப் - கலெக்டர், மாவட்ட நிர்வாகம், பரம்பிக்குளம் செயற்பொறியாளர், ஆனைமலை பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆற்று புறம்போக்கு ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உச்சநீதிமன்தறதில் வழக்கு தொடரப்பட்டது.அதில், ஆற்றுப் புறம்போக்கினை, மயானமாக பயன்படுத்தக்கூடாது என உத்தரவு வந்துள்ளது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் அச்சுறுத்தலை தாண்டி, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை