உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா

 கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 30ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி ஸ்ரீதேவி, பூதேவி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 30ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, வரும், 29ம் தேதி முதல், 31ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில், மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. 30ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள், திரவிய பொருட்கள் அனைத்தும், வரும், 29ம் தேதி காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி