உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் உலா: வனத்துறையினர் அட்வைஸ்

யானைகள் உலா: வனத்துறையினர் அட்வைஸ்

வால்பாறை :வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன. எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள் பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. சில எஸ்டேட் பகுதியில் தேயிலை காட்டிலும் பகல் நேரத்தில் முகாமிடுகின்றன. இதனால் அந்தப்பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே யானைகள் ரோட்டை கடக்கும் என்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்ககூடாது. யானைகள் நடமாடும் பகுதியில் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். எஸ்டேட் பகுதிக்குள் நுழையும் யானைகளை தொழிலாளர்கள் துன்புறுத்தக்கூடாது.இவ்வாறு, கூறினர்.வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'வால்பாறையில் மனித- வனவிலங்கு மோதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, யானைகள் நடமாடும் பகுதியை பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக நாள் தோறும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இரவு நேரத்தில், யானைகள் நடமாடும் பகுதியை பொதுமக்கள் அறியும் வகையில் எஸ்டேட் பகுதியில் சிகப்பு விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை