மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு கொடும்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 72. விவசாயியான இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள, தென்னந்தோப்பில் கீழே விழுந்த தேங்காயை எடுக்கச்சென்றார். அப்போது அங்குள்ள மோட்டார் ஷெட்டிற்கு செல்லும் மின் இணைப்பு ஒயர், அறுந்து கிடந்தது தெரியாமல், மாரிமுத்து மிதித்து விட்டார். இதனால், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தோப்புக்குச்சென்ற உறவினர் ஒருவர், இதைக்கண்டு ஊர் மக்களிடம் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.