உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: போலீசார் விசாரணை

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: போலீசார் விசாரணை

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.துடியலூர் அருகே பன்னிமடையில் கிருஷ்ணா மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள மெடிக்கல் ஷாப்பில் நேற்று காலை மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையில் இருந்த சுமார், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் எரிந்து நாசமாயின. உயிர் சேதம் இல்லை. கோவை வடக்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை