உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடைகளை கண்டுகொள்ளாத அரசுத்துறை அதிகாாிகள்; மழை நீரை சேகரிக்காததால் சிக்கல்

ஓடைகளை கண்டுகொள்ளாத அரசுத்துறை அதிகாாிகள்; மழை நீரை சேகரிக்காததால் சிக்கல்

உடுமலை : புதர் மண்டி காணப்படும், கிராமப்புற ஓடைகளை, குறிப்பிட்ட இடைவெளியில் துார்வாரி, மழை நீரை சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்படாததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 75க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில், மட்டும், இந்த ஓடைகளில் நீரோட்டம் இருக்கும்.இந்த ஓடைகள் வழியாக செல்லும் தண்ணீர், கிராம குளங்களில், நிரம்பி, சுற்றுப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மழை நீர் ஓடைகள், முறையாக பராமரிக்கப்படுவதில்லை.கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், பெரும்பாலான ஓடைகளில், மழை நீர் செல்ல வழியில்லாத அளவுக்கு புதர் மண்டியிருந்தது; குளங்களுக்கும் நீர்வரத்து கிடைப்பதில் பாதிப்பு உருவானது.தற்போதும், புதர் மண்டி பரிதாப நிலையில், மழை நீர் ஓடைகள் காணப்படுகின்றன. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை பயன்படுத்தி, குறிப்பிட்ட இடைவெளிகளில், ஓடையிலுள்ள, புதர்களை அகற்ற வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை வலுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.ஓடைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தால், பருவமழை சீசனில் கிடைக்கும் மழை நீரை குளங்களிலும், தடுப்பணைகளிலும் தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனால், தற்போதே பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை