மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
பெ.நா.பாளையம்; தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், 17வது மினி ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 26 முதல் 29 வரை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியில் விளையாட, கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, 7ம் வகுப்பு மாணவர் மிகுன்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
16-Aug-2025