உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு 

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 9,250 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுவதால், எந்த காரணத்தைக்கொண்டும் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகிறது. இளநீரின் விலை தொடர்ந்து உறுதியாக அதிகரிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை