உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் பண்ணை விலை ரூ.1 உயர்வு

இளநீர் பண்ணை விலை ரூ.1 உயர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 26 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 9,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே, எந்த காரணத்தைக்கொண்டும் இளநீர் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம்.அறுவடையை ஒரு சில நாட்கள் தள்ளி வைத்தாலே, நீங்கள் கேட்கும் விலையை வியாபாரிகள் கொடுக்கும் சூழல் உள்ளது. தொடர்ந்து வரக்கூடிய வாரங்களில் இளநீர் விலை உறுதியாக உயரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி