மேலும் செய்திகள்
புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
15-May-2025
அன்னூர்; ஆலாம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாரணாபுரம் ஊராட்சி, ஆலாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. தினமும் சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
15-May-2025