உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவில் உண்டியலில் 67.43 லட்சம் ரூபாய் காணிக்கை

மருதமலை கோவில் உண்டியலில் 67.43 லட்சம் ரூபாய் காணிக்கை

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 67.43 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது. இக்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியலில், 66,52,643 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 90,753 ரூபாயும் என, மொத்தம், 67,43,396 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது.அதோடு, 150 கிராம் 600 மி.கி., தங்கமும், 5 கிலோ 01 கிராம் வெள்ளியும், 4 கிலோ 504 கிராம் பித்தளையும் இருந்தது. ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி கமிஷனர் நாகராஜ், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ