உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வரும், 16ல் மருத்துவ முகாம்

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வரும், 16ல் மருத்துவ முகாம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் வரும், 16ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மைய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும், 16ம் தேதி நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் மதியம், 2:00 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முகாமில், தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்படுகிறது. உதவித்தொகை பதிவு செய்தல், ரயில் மற்றும் பஸ் பயணச் சலுகை சான்றிதழ் வழங்கப்படும். 'யுடிஐடி' பதிவு செய்தல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மருத்துவ பரிசோதனை அடிப்படையில், இலவச அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்படும். முகாமுக்கு வரும் போது, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் தங்களுடைய பிறப்பு சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு என அனைத்திலும், ஐந்து நகல்களை கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை இருந்தால், ஐந்து நகல்கள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்