உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய தேர் பணி துவக்கம்

 பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய தேர் பணி துவக்கம்

தொண்டாமுத்துார்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், 1.41 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தேர் உருவாக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இக்கோவிலில், 5 தேர்கள் உள்ளன. மரத்திலான இத்தேர்கள், சேதமடைந்துள்ளதால், புதிய தேர்கள் செய்ய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில், முதல் கட்டமாக, பட்டீஸ்வரர் தேரை, 1.41 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக செய்ய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், புதிய தேர் செய்யும் பணியின் துவக்க விழா, நேற்று நடந்தது. இப்பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், அர்ச்சகர்கள், சிறப்பு பூஜை செய்தனர். இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ