உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வால்பாறை, ; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 73ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு அபிேஷக அலங்கார பூஜையும் நடந்தது.அதன் பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்ரமணிய சுவாமி தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை, 11:00 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது.நாளை, 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு சிவாலயத்தில் பிரதோஷபூஜை நடக்கிறது. வரும் 11ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து முருக பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதான விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை