உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கூடைப்பந்து நாக் அவுட் சுற்றில் வீரர்கள் சுறுசுறுப்பு

ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கூடைப்பந்து நாக் அவுட் சுற்றில் வீரர்கள் சுறுசுறுப்பு

கோவை; கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில், 69வது ஒய்.எம்.சி.ஏ., வெங்கடகிருஷ்ணன் டிராபி போட்டி கடந்த மாதம், 25ம் தேதி துவங்கியது; வரும், 6ம் தேதி நிறைவடைகிறது. மாவட்ட அளவிலான இப்போட்டியில், மினி பாய்ஸ், மினி கேர்ல்ஸ், ஜூனியர் பாய்ஸ், மென் ஆகிய பிரிவுகளில், 59 அணிகள் பங்கேற்றுள்ளன.பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த, 'மினி கேர்ஸ்' பிரிவுக்கான இறுதிப்போட்டியில், எஸ்.வி.ஜி.வி.,-ஏ அணி, 50-29 என்ற புள்ளிகளில் அல்வெர்னியா பள்ளியை வென்று முதல் பரிசை தட்டியது. 'மினி பாய்ஸ்' பிரிவில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,-ஏ அணி, 63-25 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.தொடர்ந்து, ஆண்களுக்கான போட்டி 'நாக் அவுட்' முறையில் நடந்து வருகிறது. இதில், பேசன் பொள்ளாச்சி அணி, 114-56 என்ற புள்ளிகளில் ஸ்பைஸ் அணியை வென்றது. 10 எக்ஸ் அணியினர், 60-46 என்ற புள்ளிகளில், பீளமேடு அணியை தோற்கடித்தனர்.கே.பி.ஆர்., அணி, 74-68 என்ற புள்ளிகளில், பெர்க்ஸ் அணியையும் வென்றன. ஆர்.எஸ்.சி., அணி, 73-23 என்ற புள்ளிகளில், பிரெண்ட்ஸ் ஹெல்த் அணியையும் வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை