உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி முப்பெரும் விழா மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

அரசு பள்ளி முப்பெரும் விழா மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

உடுமலை; உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி ஆண்டுவிழா, பொங்கல்விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவாக முப்பெரும் விழா நடந்தது.விழாவில் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முகம்மது அலி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச்சேர்ந்த முத்துக்குமாரசாமி, நகராட்சி தலைவர் மத்தீன், சமூக ஆர்வலர் பரமசிவம், விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மூர்த்தி, டி.எஸ்.பி., சுகுமாறன் முன்னிலை வகித்தனர்.மாணவர்களின் நடனம், இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்டுவிழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் சங்கத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர். முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் ஆனந்தன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை