சுமங்கலி பூஜை
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், 13ம் ஆண்டு, சுமங்கலி பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி வேள்வி வழிபாடுடன் பூஜை துவங்கியது. பின்பு, 16 வகை வாசனை திரவியங்களால் அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்காரம், பேரொளி வழிபாடும் சுமங்கலி பூஜை நடந்தது. பின்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு வளையல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஜடையம்பாளையம் புதூர் ஊர் கவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.