உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ் எங்கள் உயிர்; அதை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது

தமிழ் எங்கள் உயிர்; அதை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : ''தமிழ் எங்கள் உயிர்; தமிழை அழிக்க எந்த கொம்பன் வந்தாலும் முடியாது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்,'' என்று கோவையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.செய்தியாளர்களிடம், பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் காமராஜர் காலத்தில், 30,000 பள்ளிகள் துவங்கப்பட்டன. அத்தனை மாணவர்களுக்கும், இலவச கல்வி வழங்கப்பட்டது.தற்போது அரசியல்வாதிகள் பலரே, பள்ளிகளை நடத்துகின்றனர். அந்தப் பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்று கொடுக்கிறார்களா இல்லையா என்ற விபரங்களை, வெளியிட வேண்டும். தமிழ் நம்முடைய உயிர். தமிழை ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ''மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி தந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று, முதல்வர் கூறுகிறார். அவரின் பேச்சை, ஆணவ பேச்சாக நான் பார்க்கிறேன். முறையற்ற பேச்சாக இருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Laddoo
பிப் 27, 2025 10:40

அய்யகோ உடன் பருப்பே நம்ம காபிரைட் / ட்ரேட் மார்க்க இன்னொருவன் யூஸ் பண்ணுவதா?


Thirumal s S
பிப் 26, 2025 14:05

அதிமுக உடன் கூட்டணி வைத்து அந்த கட்சியை முடித்து விடாதிர்கள்


Thirumal s S
பிப் 26, 2025 14:03

பீஜேபியால் முடியும்.


SUBRAMANIAN P
பிப் 26, 2025 13:31

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம். கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக இருக்கும் தமிழக மாணவர்களுடைய பெற்றோர்கள் தீர்மானம் எடுக்கவேண்டிய நேரம் இது.


Sridhar
பிப் 26, 2025 13:27

ஏன் சம்பந்தமே இல்லாம தமிழ் என் மூச்சு என்றெல்லாம் பேசி எதோ தமிழுக்கும் இந்திக்கும் போட்டி நிலவுவதைப்போன்ற தோற்றத்தை உருவாக்கவேண்டும். அட திருட்டு கும்பல்தான் விசயத்தை மடைமாற்றி இந்தி திணிப்புனு கொண்டுபோறானுங்கனு பாத்தா இவனுகளும் அதுக்கு இசைப்பாட்டு பாடுவானுங்கபோலயே


Krismoo
பிப் 26, 2025 13:16

தமிழை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று ரோஷமாக சொல்லும் நீங்கள். ஏன் ஹிந்தி காரனுக்கு ரோசம் இருக்காதா? அவனோட ஹிந்தியை எல்லா இடத்துலயும் அழிக்கிற அந்த தி மு க கரணை ரெண்டு வார்த்தை கார சாரமாக திட்டினால் நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம். எது எப்படியோ, இன்னும் சில வருடத்தில் தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலும் ஹிந்தி காரன் தான் இருப்பான். திராவிட கட்சி கதை அதோட முடிந்து விடும். ஹிந்திக்காரன் ஓட்டெல்லாம் ஹிந்திக்காரனுக்கு தான். அதாவது பி ஜே பி தான். தமிழ் வாழ்க.


Ramesh Sargam
பிப் 26, 2025 12:57

தமிழ் தமிழ் என்று தமிழ் மொழியை வைத்து அசிங்க அரசியல் செய்யும் ஸ்டாலின் மற்றும் மற்ற திமுகவினர் பார்க்காமல் தமிழ் எழுத்துக்களை எழுதச்சொல்லுங்கள் பார்க்கலாம். குறிப்பு: துண்டு சீட்டு பார்த்து எழுதவே கூடாது. பிறர் உதவி பெற்றும் எழுதவே கூடாது.


Nallavan
பிப் 26, 2025 11:23

எப்போதுமே பா ஜ க வினர் முழுமையாக எதையுமே பேசுவதில்லை, முதல்வர் மும்மொழி கல்வியை தமிழகத்தில் கொண்டுவந்தால் , ஹிந்தியை கட்டாய கல்வியாக அறிவித்தல், எங்களுக்கு ஒதுக்கும் தொகை எவ்வளவாகினும் தேவையில்லை என்றர்


GoK
பிப் 26, 2025 10:56

சேர சோழ பாண்டியர்களுக்கு பின்னர் பல்வேறு மொழி மன்னர்கள் பல்லவர்கள் சாளுக்கியர்கள் மராத்தியர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் ...தமிழ் அழிந்ததா ....மாறாக வளர்ந்தது. அழியத்தொடங்கியது தமிழைக்கூட உச்சரிக்கத்தெரியாத கூட்டம் தமில், தமிள் வாள்க வால்க எனக்கூறிக்கொண்டு ஆட்சியில் உட்கார்ந்து சாராயம் பிரியாணி கொடுத்து வாங்கும்போதுதான். மக்களின் மடமை என்று முடியுமோ, மடியுமோ அன்றுதான் விடிவுகாலம்.


rama adhavan
பிப் 26, 2025 13:01

இதை இக்கால மாணவர், இளைஞர் இடம் கொண்டு சென்று திராவிட மாயையை அழிக்க வேண்டும். இதை யார் செய்வது? இதை செய்ய ஒரு அண்ணாமலை மட்டும் முடியாது. ஒராயிரம் அண்ணாமலைகள் தேவைப்படும்.


Iniyan
பிப் 26, 2025 10:41

இவர் பா ஜ க விக்கு தேவையில்லாத ஆணி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை