வளர்ச்சிப்பணிகளில் தடங்கல் கிடையாது
கோவை; கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளில் தொய்வுகள் ஏதும் இல்லை; நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக, கலெக்டர் தெரிவித்தார்.இது குறித்து கலெக்டர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், தொய்வின்றி நடந்து வருகின்றன. மழைகாலத்தில் பேரிடர் மேலாண்மை பணி சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டது. கனிமவளக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும், தொடர்ந்து வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, கலெக்டர் கூறினார்.