உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்பனைக்காக கள் வைத்திருந்தவர்கள் கைது

விற்பனைக்காக கள் வைத்திருந்தவர்கள் கைது

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அருகே விற்பனைக்காக 'கள்' வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் சட்டவிரோதமாக 'கள்' இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தொடர்ந்து சொக்கனூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாரிமுத்து, 60, விவசாயி என்பவரிடம், 8 லிட்டர் கள் மற்றும் கந்தசாமி, 63, விவசாயி என்பவரிடம் இருந்து 8 லிட்டர் கள் என மொத்தம் 16 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !