உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

நெகமம்; நெகமம், ஆலம்பாளையத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி ஆச்சிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 50, மற்றும் ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் பிரதீப், 45. இருவரும், ஆலம்பாளையம் மயானம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, பணம் 500 ரூபாய் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை