உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

 உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே உச்சையனூர், ஆர்.ஆர். நகர், தடாகம் புதூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி பூஜை, நாடி சந்தானம், விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. 7:00 மணிக்கு அம்மனுக்கு நகை பெட்டி கொண்டு வருதல், 9:30 மணிக்கு தீபாராதனை, மூலாலய மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு நந்தா விளக்கு மண்டல பூஜை, 7:00 மணிக்கு தடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவில் நாம சங்கீர்த்தன மற்றும் பிருந்தாவன் கலை நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ